மாட்டுக்காக மீண்டும் ஒரு முஸ்லிம் படுகொலை - இருவர் படுகாயம்!

மாட்டுக்காக மீண்டும் ஒரு முஸ்லிம் படுகொலை - இருவர் படுகாயம்!
ஆல்வார்(12 நவ 2017): ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே முஸ்லிம் பால் வியாபாரி பசு பயங்கரவாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மீவாட்டிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூருக்கு மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற பால் வியாபாரி உமர் முஹம்மது என்பவர் ஆல்வார் பகுதியில் பசு பயங்கரவாத கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர். பசு பயங்கரவாத கும்பல் உமரின் உடலை ரெயில்வே ட்ராக்கில் வீசி எறிந்துள்ளது.
இதுகுறித்து உமரின் மாமா இல்யாஸ் முஹம்மது ஆல்வர் போலீஸில் புகார் அளித்தார். அதில், எட்டுபேர் கொண்ட கும்பல் உமரின் வாகனத்தை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் புகாரை ஏற்க மறுத்துள்ளதோடு வழக்கு பதிவு செய்யவும் இல்லை.
இதுகுறித்து உமருடன் சென்று படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாஹிர் முஹம்மது  வாக்குமூலம் அளித்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே பசு பயங்கரவாத கும்பல் மீது வழக்கு பதிவு செய்யாமல் உமரின் உடலை பெறப்போவதில்லை என்று உமரின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மாட்டுக்காக மீண்டும் ஒரு முஸ்லிம் படுகொலை - இருவர் படுகாயம்! மாட்டுக்காக மீண்டும் ஒரு முஸ்லிம் படுகொலை - இருவர் படுகாயம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.