ராகுலுக்கு நன்றி: ‘நிர்பயா’ தாயார்!

ராகுலுக்கு நன்றி: ‘நிர்பயா’ தாயார்!

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு பெண் ஒருவர் ஆறு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதுமே இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணின் நலன் கருதி அவரது உண்மையான பெயருக்குப் பதிலாக ’நிர்பயா’ எனப் பெயர் சூட்டப்பட்டு இந்த வழக்கு அழைக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு பின் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான சட்டங்களை அப்போதைய காங்கிரஸ் அரசு வலுப்படுத்தியது. பெண்களின் பாதுகாப்புக்காக ‘நிர்பயா’ பெயரில் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “ராகுல் காந்தியின் உதவியால்தான் எனது மகன் தற்போது பைலட் ஆகவுள்ளான்” என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
ராகுல் அவ்வப்போது தொலைப்பேசியில் அழைத்து தனது மகனுக்கு ஆலோசனை வழங்குவார் என மெயில் டுடே நாளிதழில் குறிப்பிட்டுள்ள ஆஷா, “தனது மகனின் மன உளைச்சலை நீக்கி தன்னம்பிக்கையை ராகுல் வழங்கினார்” எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
“ராணுவத்தில் சேர முடியாத தனது மகனுக்கு அறிவுரை வழங்கியதுடன் விமான ஓட்டும் பயிற்சியில் சேரவும் ராகுல் உதவினார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ராகுல் மட்டுமல்லாது அவரது தங்கை பிரியங்கா காந்தியும் தனது குடும்ப நலன் தொடர்பாக அவ்வப்போது விசாரிப்பார்” என்றும் ஆஷா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது விமான பயிற்சியில் இறுதியாண்டு படித்துவரும் நிர்பயாவின் தம்பி விரைவில் விமான ஓட்டுநராகப் பணியாற்றவுள்ளார்.
ராகுலுக்கு நன்றி: ‘நிர்பயா’ தாயார்! ராகுலுக்கு நன்றி: ‘நிர்பயா’ தாயார்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.