இந்தியாவில் நடைபெறும் வகுப்புக் கலவரங்கள் பா.ஜ.கவுக்கு தேர்தலில் ஆதாயம் தருவதாக ஆய்வில் தகவல்!

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு வகுப்புக் கலவரமும் பா.ஜ.கவுக்கு தேர்தலில் ஆதாயத்தை பெற்றுத்தருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதால் காங்கிரஸ் தேர்தலில் தோற்பதாக பரப்புரைச் செய்யப்பட்டுவரும் வேளையில் இந்த புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு கலவரத்திற்கு பிறகும் நடைபெறும் தேர்தல்களில் 0.8சதவீதம் பாரதீய ஜனசங்கம், பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியில் அதிகரித்துவருகிறது.அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் மூன்று அரசியல் ஆய்வாளர்கள் நடத்திய மிகவும் புதிய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.1962-ஆம் ஆண்டிற்கும், 2000-ஆம் ஆண்டிற்கும் இடையே நடந்த தேர்தல்களின் புள்ளிவிபரங்களை பரிசோதித்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலெல்லாம் காங்கிரஸ் சந்தித்த தோல்விகளின் பின்னணியில் ஒரு வகுப்புக் கலவரம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சராசரியைவிட அதிகமான வகுப்புக் கலவரங்கள் நடந்த சூழல்களிலெல்லாம் தொடர்ந்து வந்த தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவில் ஒரு ஆண்டில் நடைபெறும் வகுப்புக் கலவரங்களில் 10
சதவீதத்திற்கும் அதிகமாக நடைபெற்ற காலங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.’வகுப்புக்கலவரங்கள் கட்சிகளை பாதிப்பதற்கு இந்தியாவில் உள்ள ஆதாரங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காரைத் நெல்லிஸ், மைக்கேல் வீவர், ஸ்டீவன் ரோஸன்ஸீக்  ஆகிய அரசியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளார்கள்.ஒரு கலவரம் முடிந்தவுடன் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 32 சதவீத வாக்குகள் குறைகிறது.இந்து-முஸ்லிம் கலவரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கே இழப்பு ஏற்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.கலவரங்களுக்கு பிறகு அதனை கட்டுப்படுத்துவது, சமாதானத்திற்கான காங்கிரஸின் வழக்கமான முயற்சிகள் அவர்களுடைய பிரதான வாக்குவங்கியான முஸ்லிம்களிடம் கூட பின்னடவை ஏற்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
- See more at: http://www.thoothuonline.com/archives/70474#sthash.lJhFg9LI.dpuf
இந்தியாவில் நடைபெறும் வகுப்புக் கலவரங்கள் பா.ஜ.கவுக்கு தேர்தலில் ஆதாயம் தருவதாக ஆய்வில் தகவல்! இந்தியாவில் நடைபெறும் வகுப்புக் கலவரங்கள் பா.ஜ.கவுக்கு தேர்தலில் ஆதாயம் தருவதாக ஆய்வில் தகவல்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.