அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெறவே விருப்பம் - ஜவாஹிருல்லா


சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்புவதால் வைகோ தலைமையிலான மாற்று கூட்டணியில் இணையவில்லை என்று மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளதாவது: 
மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக மட்டுமே மக்கள் நலனுக்காக கூட்டு இயக்கத்தில் இணைந்திருந்தோம். அதை தேர்தலுக்கான அரசியல் கூட்டணியாக மாற்றிக் கொள்வார்கள் என கணிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க. அல்லது தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே இணைய விரும்புகிறோம். 
எங்களது இம்முடிவை ஏற்கெனவே மக்கள் நலனுக்கான கூட்டு இயக்கத் தலைவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே, வரும் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்த்தில் எங்கள் கட்சி பங்கேற்காது. தற்போதைய சூழலில் அ.தி.மு.க, திமுக-வுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவுதான். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 

வைகோ தலைமையிலான மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் புதிய தேர்தல் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக நாளை மறுநாள் திருவாரூரில் அறிவிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெறவே விருப்பம் - ஜவாஹிருல்லா அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெறவே விருப்பம் -  ஜவாஹிருல்லா Reviewed by நமதூர் செய்திகள் on 21:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.