அந்நிய மண்ணில் மோடியின் கீழ்த்தரமான அரசியல் - சோனியா தாக்கு!

கயை(03/10/2015): அந்நிய மண்ணில் தனது அரசியல் எதிரிகளை விமர்சித்து எந்த பிரதமரும் செய்யாத கீழ்த்தரமான அரசியலை பிரதமர் மோடி செய்து வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
பிகாரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள சோனியா, கயை நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "மக்களவைத் தேர்தலின்போது தாம் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் இருந்து மோடி பின்வாங்கி விட்டார். அவற்றை மறந்துவிட்டு, தற்போது ஜன்தன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடங்கியுள்ளது. தங்களின் முந்தைய வாக்குறுதிகளைப் புறந்தள்ளியவர்கள், தற்போது அறிவிக்கும் புதிய திட்டங்களை மட்டும் நிறைவேற்றி விடுவார்களா? எங்களைப் பொருத்தவரை வாக்குறுதி என்பது தேர்தலுக்காகக் கூறப்படும் வெற்று வார்த்தை அல்ல.
பிகார் அல்லது இந்த நாட்டின் கண்ணியம் குறித்து அவர் கவலைப்படாத நிலையில், உங்களின் (பிகார் மக்கள்) கண்ணியம் பற்றி அவர் கவலைப்படுவாரா?

இதுவரை எந்தப் பிரதமரும் அன்னிய மண்ணில் தன் அரசியல் எதிரிகளை விமர்சித்ததோ அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததோ கிடையாது. ஆனால் அதை பிரதமர் நரேந்திர மோடி செய்கிறார். இது அவரது குறுகிய மனப்பான்மையையும், கீழ்த்தரமான அரசியலையும் காட்டுகிறது." என்றார்.
அந்நிய மண்ணில் மோடியின் கீழ்த்தரமான அரசியல் - சோனியா தாக்கு! அந்நிய மண்ணில் மோடியின் கீழ்த்தரமான அரசியல் - சோனியா தாக்கு! Reviewed by நமதூர் செய்திகள் on 21:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.