வாரணாசியில் மோடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!


வாரணாசியில் மோடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
திருச்சி (23 மார்ச் 2019): வாணராசியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ”விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பலமுறை டெல்லியில் போராட்டம் நடத்தி விட்டோம். அதற்கு, மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென்னிந்திய நதிகள் இணைப்பு, வங்கிக் கடன் தள்ளுபடி, விலை நிர்ணயக் கொள்கை ஆகிய பிரச்னைகள் குறித்த பல்வேறு போராட்டங்களுக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இனியும் தொடர்ந்து எங்கள் கோரிக்கைகளுக்காக, மோடியிடம் கையேந்தி நிற்க முடியாது. அவரை வீழ்த்த வேண்டும் என்றால் அவருக்கு எதிராகத் தேர்தலில் களமிறங்குவது தான் சரியானதாக இருக்கும்.
எனவே, நாங்கள் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளோம். இதற்காக வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறோம். வாரணாசியில் எங்களுக்கு விவசாயிகளின் செல்வாக்கு உள்ளதால் இந்தத் தேர்தல் போராட்டம் எங்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். எங்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டி மோடி அமைதியாக இருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் இதை செய்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
வாரணாசியில் மோடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! வாரணாசியில் மோடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.