சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்!

சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்!

கலை நிகழ்ச்சிக்காக சென்ற தப்பாட்ட கலை குழுவினரை சாதி வெறியர்கள் அடித்து சித்தரவதை செய்துள்ள சம்பவம் புதுச்சேரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
புதுச்சேரி சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருபவர் ராகுல். இவர் தப்பாட்ட கலைக்குழு ஒன்றை  நடத்தி வருகிறார். ராகுல் தலைமையிலான குழு ஒன்று கடந்த 8ஆம் தேதி, இரவு 9.30 மணி அளவில் புதுச்சேரியில் உள்ள நிர்ணயபட்டு பகுதியில் கலை நிகழ்ச்சி நடத்தச் சென்றுள்ளார்.
அவர்கள் கலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அதே ஊரைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், வன்னியர் பாடலுக்கு இசை அமைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ராகுல் மற்றும் குழுவைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு அது போன்ற பாடலுக்கு இசையமைக்கத் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். இதில் கோபமடைந்த அந்த இளைஞர்கள், கலைக் குழுவைச் சேர்ந்தவர்களைச் சாதி ரீதியாக இழவு படுத்திப் பேசி அவர்களின் பறையை தூக்கி எரிந்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
இதில் காயமடைந்த கலை குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பாகூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவாக கூறப்படுகிறது. மேலும் வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்! சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.