பாஜகவின் விஞ்ஞான ஊழல்

பாஜகவின் விஞ்ஞான ஊழல்

அசாமில் இன்று தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், மக்கள் என்ன சின்னத்திற்கு வாக்களித்தாலும், அந்த வாக்கு பாஜகவிற்குப் பதிவாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அசாமில் இன்று (ஏப்ரல் 11) தேஜ்பூர், கலியாபோர், ஜோர்கட், திப்ருகார், லகிம்பூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்த வண்ணம்  உள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் ஐந்து தொகுதிகளில் ஒன்றான தேஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோதாம்காட் மீரி கான் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் மக்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவிற்குப் பதிவாகிறது.
இதனையடுத்து மக்கள் இந்த பிரச்னை குறித்துத் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில், வாக்குக்கெடுப்பு நிறுத்திவைக்கப்பட்டது. விரைவில் வாக்கு எந்திரத்தை மாற்றியமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதிக அளவிலான கிராமப்புற வாக்காளர்கள் தேஜ்பூர் பகுதியில் இருப்பதால் மிக முக்கியமான மக்களவை தொகுதிகளில் ஒன்றாக  தேஜ்பூர் கருதப்படுகிறது. இந்நிலையில் அந்த தொகுதியில் இந்த பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவின் விஞ்ஞான ஊழல் பாஜகவின் விஞ்ஞான ஊழல் Reviewed by நமதூர் செய்திகள் on 22:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.