கவர்னர் மாளிகை முற்றுகை: எஸ்.டி.பி.ஐ!

மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னையில் நேற்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.

முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு மாநிலத்தலைவர் தெகலான் பாகவி பேசுகையில் கூறியதாவது, மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு கடந்த 2 வருட ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தற்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பொது மக்களின் மீது ஒரு பொருளாதார போரை நிகழ்த்தியுள்ளது. அறிவுப்பூர்வமான முறையில் திட்டமிடாத பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தேசத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கை மூலம் பிரதமர் மோடி நாட்டின் குடிமக்களுடைய உரிமைகள் மீது கை வைத்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கான உரிமையை வழங்காததால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக மீனவர் நலனுக்காக கச்சத்தீவை மீட்பதற்காக எதுவும் செய்யவில்லை. ஒற்றை கலாச்சாரத்துக்கு எதிரான ஜல்லிக்கட்டு அறவழிப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மத்திய பாஜக அமைச்சர்கள் வகுப்புவாத சிந்தனைகளை தூண்டினர். இது போன்று சிந்தனையுடன் செயல்படுகின்ற பாஜக அரசை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டித்து தேசம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் மாளிகை முற்றுகை: எஸ்.டி.பி.ஐ! கவர்னர் மாளிகை முற்றுகை: எஸ்.டி.பி.ஐ! Reviewed by நமதூர் செய்திகள் on 00:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.