அறிவியல் தமிழ் மன்றத்தை இயக்க வேண்டும்!

அறிவியல் தமிழ் மன்றத்தை இயக்க வேண்டும்!

அறிவியல் தமிழை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அறிவியல் தமிழ் மன்றத்தை இயக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 26) விடுத்துள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கணினி, இணையம் வழியிலான தகவல் தொடர்புகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அறிமுகமாகிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதற்கு ஏற்ற வகையில், அறிவியல் தமிழ் வளரவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
“ஜப்பான் நாட்டில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை ஜப்பானுக்குள் கொண்டுவந்து விற்பதாக இருந்தாலும், முதலில் அதற்கான விளக்கங்களை ஜப்பானிய மொழியில் அச்சிட்டுத் தர வேண்டும். அங்கே அனைத்து நிலைகளிலும் ஜப்பானிய மொழியே கோலோச்சுகின்றது. அதுபோலவே, சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் தாய்மொழியிலேயே அறிவியலைப் பயில்கின்றார்கள்” என்று கூறியுள்ள அவர், அதுபோல, அறிவியல் தமிழை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் 2006ஆம் ஆண்டில் ‘அறிவியல் தமிழ் மன்றம்’ அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் முதல் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டில் அவர் உடல்நலக்குறைவு காரணமாகப் பதவியில் இருந்து விலகிக்கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் கா. வேழவேந்தன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இம்மன்றம் செயல்படுத்தப்படாமல் முடக்கிவைக்கப்பட்டிகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கணினி, இணையம் வழியிலான தகவல் தொடர்பில் பல்வேறு புதிய ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றிற்கு இணையான நல்ல தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள வைகோ, “தகவல் தொழில்நுட்பத்தினைத் தமிழ் மொழியிலேயே படித்துத் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற பல்வேறு அறிவியல் தமிழ் நூல்களைளியிட வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளிலான உயர்கல்வியில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அறிவியல் பயன்பாட்டில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுவரும் இச்சூழலில் அனைத்து வகையான அறிவியல் தமிழ் தொடர்பான பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டியிகின்றது” என்கிறார்.
இனி தமிழில் மாதந்தோறும் 1000 புதிய சொற்கள் சேர்க்கப்படும் என்று, சில மாதங்களுக்கு முன்பு தமிழ் ளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அறிவியல் தமிழ் தொடர்ந்து தேக்க நிலையில் இருந்துவருகின்றது என்று வேதனை தெரிவித்துள்ள அவர், “ துறைசார் இதழ்கள், ஆய்வு ஏடுகள் தமிழில் கிடைக்காத நிலையே இருக்கின்றது. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை என்ற குறைபாடும் இருக்கின்றது.
அறிவியல் தமிழ் மன்றத்தை இயக்க வேண்டும்! அறிவியல் தமிழ் மன்றத்தை இயக்க வேண்டும்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.