கெத்து காட்டிய அபிநந்தன் - காட்டிக் கொடுத்த இந்திய ஊடகங்கள்!


கெத்து காட்டிய அபிநந்தன் - காட்டிக் கொடுத்த இந்திய ஊடகங்கள்!
புதுடெல்லி (28 பிப் 2019): பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கியுள்ள அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடன் தான் யார் என்பதை கூற மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் சொல்ல மறுத்த அனைத்து தகவல்களையும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன. என்று குமுறுகின்றனர் நெட்டிசன்கள்.
ராணுவ அதிகாரி: உங்களது பெயர் என்ன?
அபிநந்தன்: கமாண்டர் அபிநந்தன்
ராணுவ அதிகாரி: எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம்?
அபிநந்தன்: ஆம். நான் நன்றாக நடத்தப்படுகிறேன். இங்கு சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். இந்த கருத்தை, எனது நாட்டிற்கு சென்ற பிறகும் மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். ராணுவ வீரர்கள், கும்பலிடமிருந்து என்னை கேப்டன் , அதிகாரிகள் அனைவரும் நன்றாக கவனித்து கொண்டனர். இதனையே, இந்திய ராணுவத்திடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரி: இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் நீங்கள்?
அபிநந்தன்: அதனை நான் உங்களிடம் சொல்ல வேண்டுமா?நான் தென் பகுதியை சேர்ந்தவன்
ராணுவ அதிகாரி: நீங்கள் கல்யாணமானவரா?
அபிநந்தன்: ஆமாம்
ராணுவ அதிகாரி: தேநீர் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்
அபிநந்தன்: தேநீர் சிறப்பாக உள்ளது. நன்றி.
ராணுவ அதிகாரி: நீங்கள் வந்த போர் விமானத்தின் வகை என்ன?
அபிநந்தன்: அதனை உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், உடைந்த பாகங்களை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
ராணுவ அதிகாரி: என்ன பணிக்கு வந்துள்ளீர்கள்?
அபிநந்தன்: அதனை சொல்ல முடியாது.
இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது.
இதற்கிடையே இந்திய ஊடகங்கள் அபிநந்தனின் மாநிலம் வீடு குடும்பம் மனைவி என அனைத்தையும் பொதுவெளியில் கூறி அபிநந்தன் சொல்ல மறுத்த அனைத்தையும் காட்டிக் கொடுத்ததாக நெட்டிசன்கள் இந்திய ஊடகங்களை விமர்சித்து வருகின்றனர்.
கெத்து காட்டிய அபிநந்தன் - காட்டிக் கொடுத்த இந்திய ஊடகங்கள்! கெத்து காட்டிய அபிநந்தன் - காட்டிக் கொடுத்த இந்திய ஊடகங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.