அபிநந்தனை விடுவிக்க முயற்சிக்காமல் பிரச்சாரம் முக்கியமா? மோடி மீது காங் பாய்ச்சல்!

அபிநந்தனை விடுவிக்க முயற்சிக்காமல் பிரச்சாரம் முக்கியமா? மோடி மீது காங் பாய்ச்சல்!
புதுடெல்லி (28 பிப் 2019): இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் திரும்பி வர வேண்டும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, நம் பிரதமரால் சில நிமிடங்கள் கூட பிரச்சாரத்தை நிறுத்த முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் வீடியோ கான்பரன்சிங் வழியாக பேசிய மோடி ஒவ்வொரு பூத்திலும், ஒவ்வொரு பாஜக பணியாளரும் பத்து வாக்காளர்களை கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோதி பேசினார். மேலும், இந்தியா ஒன்றாக உழைத்து, ஒன்றாக வளர்ந்து. ஒன்றாக போராடி வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.
புதிய இந்தியாவை உருவாக்க புது முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோதி தெரிவித்தார். "நம் எதிரிகிள் நம்மை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். நம் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நாம் நிற்கிறோம்" என்றார்.
இந்நிலையில் நாடே ரணகளமாகியிருக்கும் போது மோடியால் ஒரு நிமிடம் கூட பிரச்சாரத்தை கைவிட முடியவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.
அபிநந்தனை விடுவிக்க முயற்சிக்காமல் பிரச்சாரம் முக்கியமா? மோடி மீது காங் பாய்ச்சல்! அபிநந்தனை விடுவிக்க முயற்சிக்காமல் பிரச்சாரம் முக்கியமா? மோடி மீது காங் பாய்ச்சல்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.