நவீன காலணி ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்டெடுப்போம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டிருக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, 70 வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாளில் சாதி, மதம், மொழி, இனங்களை கடந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்வோம். அவர்களின் தியாகத்தை நாம் போற்றுவோம்.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து நாடு விடுதலை பெற்றாலும், தற்போது ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நாட்டின் ராணுவம் உட்பட அனைத்துத் துறைகளிலும் வழங்கப்பட்டுள்ள 100 சதவீத அந்நிய முதலீடு போன்ற காரணங்களால் நமது தேசம் மீண்டும் நவீன காலணி ஆதிக்கத்தின் கீழ் அடிமை தேசமாகவே தொடர்ந்து வருகின்றது. தேசத்தின் சுதந்திர காற்றை சாமானிய மக்கள் இன்னும் சுவாசிக்க முடியவில்லை. மதவெறி சக்திகள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றன. மாட்டிறைச்சியின் பெயரால் தலித், சிறுபான்மை மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இத்தகைய போக்கு தேசத்தின் நலனை வெகுவாக பாதிக்கும்.
ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள், பெரும்பான்மை மமதையில் நவீன வடிவில் சர்வாதிகாரத்தை அமல்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய சர்வாதிகாரப் போக்கு நமது நாட்டின் ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் என்பதால் அதற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றினைவது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே, சாதி, மதங்களை கடந்து நாம் தேசத்தின் நலனுக்காக ஒன்றிணைவோம்.
மேலும் இந்நாளில் வறுமை, ஏழ்மை, சமூக தீங்குகள், குற்றங்களுக்கு காரணமான மதுவினை முழுமையாக தடை செய்திடவும், மதவாதம், தீண்டாமை, கலவரம் ஆகியன இல்லாத நாடாக மாற்றிடவும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நம் நாடு முன்னேற்றம் அடையவும், சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அகன்று சகிப்புத் தன்மை அனைவரிடமும் வளர்ந்திடவும், உண்மையான ஜனநாயக மற்றும் மதச் சார்பாற்ற நாடாக நம் நாட்டை நிலைநிறுத்தவும் நாம் அனைவரும் சபதமேற்போம்.
இவ்வாறு அவர் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நவீன காலணி ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்டெடுப்போம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி! நவீன காலணி ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்டெடுப்போம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி! Reviewed by நமதூர் செய்திகள் on 21:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.