வைகோ, திருமாவளவன், ஜி.கே.வாசன், சீமான் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு கைதாகினர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார் அப்போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இரண்டாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். தமிழகத்தில் நேற்று நடந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக  16  ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
வைகோ, திருமாவளவன், ஜி.கே.வாசன், சீமான் கைது வைகோ, திருமாவளவன், ஜி.கே.வாசன், சீமான் கைது Reviewed by நமதூர் செய்திகள் on 23:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.