ம.பி.யில் சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகள்!


அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தலித் மற்றும் பழங்குடிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தமக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக பேசினார். ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கிய இலவச பைகளில் ‘ஆதி திராவிடர்/பழங்குடி நலத்திட்டத்தில் வழங்கப்பட்டது’ என முத்திரை குத்தி வழங்கியிருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் மண்டாசூர் மாவட்ட அரசு கல்லூரியில் 250 ஆதி திராவிடர்/பழங்குடி மாணவர்களுக்கு வழங்கிய பைகளில் இப்படியான வாசகங்களை பளிச்சென அச்சிட்டு வழங்கப்பட்டிருக்கிறது. தலித்துகள், பழங்குடிகளுக்கு எதிராக சாதிய மனோபாவம் உள்ள சமூகத்தில், அதை வெளிப்படைய காட்டிக் கொடுக்கும் விதத்தில் ம.பி. அரசின் செயல்பாடு உள்ளதாக கண்டனங்கள் கிளம்பி வருகிறது.
பாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் சாதிய படிநிலையைப் பேணும் இத்தகைய செயலை கண்டிப்பதோடு, போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளது ம.பி. காங்கிரஸ்.
ம.பி.யில் சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகள்! ம.பி.யில் சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.