உ.பி வெற்றியை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மாயவதியுடன் சந்திப்பு!

உ.பி வெற்றியை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மாயவதியுடன் சந்திப்பு!
லக்னோ (15 மார்ச் 2018): உத்திர பிரதேச இடைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மாயாவதியை சந்தித்துப் பேசியுள்ளார்.
உத்திர பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற நாடாளு மன்ற இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. அதிலும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் கோட்டையான கோராக்பூரில் தொடர்ந்து ஐந்து முறை யோகி தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையில் இம்முறை அதிர்ச்சி தோல்வி அடைந்து பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு இன்னொரு காரணமாக இருந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை அகிலேஷ் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
உ.பி வெற்றியை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மாயவதியுடன் சந்திப்பு! உ.பி வெற்றியை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மாயவதியுடன் சந்திப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.