இலங்கை தூதரகம் முன்பு தமுமுக போராட்டம்!

இலங்கை தூதரகம் முன்பு தமுமுக போராட்டம்!
சென்னை (14 மார்ச் 2018): முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் தமுமுக கண்டன போராட்டம் நடத்தியது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக 1983ல் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் நடத்திய இனக்கலவரங்களை நினைவூட்டும் வகையில் இலங்கையில் கடந்த சில தினங்களாக முஸ்லிம் சிறுபான்மையினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சிங்கள பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் கலவரங்களைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்தக் கலவரங்களில் 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடைபெற்று அவற்றில் 4 பள்ளிவாசல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பல நூறு முஸ்லிம் கடைகளும் வீடுகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை பொது பல சேனா, ராவண பாலையா உள்ளிட்ட சிங்கள இனவெறி மற்றும் மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு நடத்தி வருகின்றன.
இலங்கை தூதரகம் முன்பு தமுமுக போராட்டம்! இலங்கை தூதரகம் முன்பு தமுமுக போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.