உத்தர பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழிப்பு: 5 வாலிபர்கள் வெறிச்செயல்


உத்தரப் பிரதேச மாநிலம் மாவானா பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை 5 இளைஞர்கள் கடத்தி கற்பழித்துள்ளனர். இதுதொடர்பாக 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

14 வயதான அந்த மாணவி கடந்த புதன்கிழமை அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை 5 இளைஞர்கள் இன்சவுலி பகுதியில் உள்ள காட்டுக்கு கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது கைகளை கட்டிவிட்டு மயக்க மருந்து கொடுத்துள்ளார்கள்.

சுய நினைவை இழந்த அந்த பெண்ணை, அவர்கள் ஒவ்வொருவராக மாறிமாறி கற்பழித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்த அந்த நபர்கள், பின்னர் அவரது வீட்டின் அருகே விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த பெண், தனது குடும்பத்தினரிடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அஜ்மத் மற்றும் 4 பேர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், சம்பவம் நடப்பதற்கு முன்பு, அஜ்மத் கீழ்த்தரமான கருத்துக்களை கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழிப்பு: 5 வாலிபர்கள் வெறிச்செயல் உத்தர பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழிப்பு: 5 வாலிபர்கள் வெறிச்செயல் Reviewed by நமதூர் செய்திகள் on 03:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.