வேப்பந்தட்டை– வாலிகண்டபுரம் இடையே மோசமான நிலையிலுள்ள சாலையை உடனே சீரமைக்க கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வாலிகண்டபுரம் இடையே மோசமான நிலையிலுள்ள சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என முதல்– அமைச்சர் ஜெயலலிதாவிற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் வெற்றியழகன் மற்றும் அனுக்கூரை சேர்ந்த பொது மக்கள் பலர் இணைந்து தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பயுள்ளனர். அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
வேப்பந்தட்டையிலிருந்து அனுக்கூர், குடிக்காடு, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் வழியாக வாலிகண்டபுரம் வரை செல்லும் சாலை 12 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த சாலை கடந்த சில வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இந்த மோசமான சாலையினால் வாலிகண்டபுரத்திலிருந்து வேப்பந்தட்டை செல்லக் கூடியவர்கள் பெரம்பலூர் வழியாக அதாவது 30 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்கிறார்கள்.
இந்த மோசமான சாலையினால் அனுக்கூர் மற்றும் குடிகாடு கிராமத்திலுள்ளவாகள் அவசரத்தேவைக்கு வாடகைக்கு கார் வரசொன்னால்கூட யாரும் வருவதில்லை. பேருந்துகளும் சரியாக வருவதில்லை. இதனால் பிரசவ காலங்களில் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மோசமான சாலைகள் குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை போர்கால அடிப்படையில் சீரமைக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனுக்கூர், குடிகாடு மற்றும் வாலி கண்டபுரம் பகுதி மக்களை ஒன்று திரட்டி வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
வேப்பந்தட்டை– வாலிகண்டபுரம் இடையே மோசமான நிலையிலுள்ள சாலையை உடனே சீரமைக்க கோரிக்கை வேப்பந்தட்டை– வாலிகண்டபுரம் இடையே மோசமான நிலையிலுள்ள சாலையை உடனே சீரமைக்க கோரிக்கை Reviewed by நமதூர் செய்திகள் on 03:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.