திருவனந்தபுரத்தில் பார்வையற்ற மாணவி ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு: டிரைவர் கைது


திருவனந்தபுரத்தில் பார்வையற்ற மாணவி ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு: டிரைவர் கைது

திருவனந்தபுரம், பிப். 2–
திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு பிளஸ்–2 மாணவி பஸ்சில் வந்து இறங்கினார். அதன் பிறகு அவர், அங்கிருந்த ஆட்டோ ஸ்டோண்டில் ஒரு ஆட்டோ பிடித்து கிழக்கு கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
அந்த ஆட்டோவின் டிரைவர் ஹரிசங்கர் (வயது 48). அந்த மாணவியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றார். அந்த மாணவி பார்வை குறைபாடு உள்ளவர் என்பதை உணர்ந்து கொண்ட ஆட்டோ டிரைவருக்கு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
கிழக்கு கோட்டைக்கு செல்லாமல் மருத்துவக் கல்லூரி சாலையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆட்டோவிற்குள் வைத்தே அந்த மாணவியை அவர் கற்பழித்து விட்டார்.
பார்வையற்ற நிலையில் அந்த ஆட்டோ டிரைவரை எதிர்த்து போராட முடியாத அந்த மாணவி ஆட்டோவுக்குள்ளே மயங்கி விட்டார். உடனே ஆட்டோ டிரைவர் ஹரிசங்கர் அந்த மாணவியுடன் திருவனந்தபுரம், தம்பானூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்றார்.
மாணவியை ஆட்டோவிலேயே விட்டு விட்டு அவர் லாட்ஜில் அறை எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த டோலி என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பெண் ஆட்டோவில் மாணவி மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து அவரை எழுப்பி நடந்த விவரத்தை விசாரித்தார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த மாணவி கண்ணீருடன் கூறினார். உடனே டோலி இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஷீன் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆட்டோ டிரைவர் ஹரிசங்கரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் இதுபோல வேறு யாரிடமாவது நடந்துள்ளாரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் பார்வையற்ற மாணவி ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு: டிரைவர் கைது திருவனந்தபுரத்தில் பார்வையற்ற மாணவி ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு: டிரைவர் கைது Reviewed by நமதூர் செய்திகள் on 22:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.