மாட்டிறைச்சித் தடையால் மருந்துகளின் விலைகளும் உயருகின்றன!

மும்பை: ஜெலட்டின் கேப்ஸ்யூல் கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் மருந்துப் பொருள்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாக மருந்து தயாரிக்கும் துறை யினர் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பொருள் களின் விலைகளும் உயரு கின்றன.
மாட்டிறைச்சிக்காகத் தடை கோரி போராடுப வர்கள் இந்த உண்மை தெரியும்போது சற்று கடினமாகவே இருக்கும். ஆனால், கால்நடைகள் கொல்லப்படுவது வெறும் இறைச்சி உண்பவர்களின் மகிழ்வுக்காக மட்டுமல்ல. மருந்து தயாரிக்கும் துறை களிலும் பயன்படுத்துவதற் காக கால்நடைகள் கொல் லப்படுகின்றன.

மருந்துகளை ஜெலட்டின் கேப்ஸ்யூல்களில் (குப்பிகள்) அடைத்து வழங்குகிறார்கள். வைட்ட மின் சத்து மாத்திரைகள், கோழித் தீவனம் எலும் புகள், தோல் மற்றும் கால் நடைகளின் திசுக்களிலி ருந்து தயாரிக்கப்படுகிறது.
மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த செயல்அலுவலராக உள்ள ஒருவர் கூறும்போது, சில வழிகளில் அல்லது மற்ற வழிகளில் நாம் எல்லோ ருமே நம்முடைய அன் றாட வாழ்வில் மாட்டி றைச்சியை எடுத்துக்கொள் கிறோம் என்று கூறினார். மாநில அரசு வழக்கு போட்டுவிடும் என்கிற அச்சத்தால் தம் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண் டுள்ளார்.
இந்தியாவில் பெரும் பாலான ஜெலட்டின் தயாரிக்கும் நிறுவனத்தினர் கூறும்போது,  மாட்டின் எலும்புகளைக் கொண்டுதான் ஜெலட் டின் தயாரிக்கிறோம் என்று கூறுகின்றனர். மகாராட்டிரம் மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையில் கடுமையான சட்டங்களின் மூலம் தடை போடப்பட் டுள்ளதால், வரும் நாள் களில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அச் சுறுத்தலாக இருப்பதாக அச்சத்தை வெளிப்படுத் துகின்றனர்.
ஜப்பான் நிறுவனமா கிய நீட்டாவுடன் இணைந்து ஜெலட்டின் உற்பத்தியில் கேரளாவை மய்யமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நீட்டா ஜெலட்டின் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஜ்ஜிவ் மேனன் கூறும்போது, எருமைகளின் எலும்பு களையே நாங்கள் பயன் படுத்துகிறோம். எருமை யின் எலும்பிலிருந்து கிடைக்கும் உறுதியான படிமங்களிலிருந்து எடுத் துக்கொள்கிறோம்.
இதில் உள்ள பிரச் சினை என்னவென்றால், அவைகளை எடுத்துச் செல்லும்போது, நேரடியாக எந்த மாட்டின் எலும்பி லிருந்து எடுக்கப்பட்டது என்பதை அது எருமை மாட்டிலிருந்து எடுக்கப் பட்டதா? பசு மாட்டிலி ருந்து எடுக்கப்பட்டதா? என்று யாரும் சாதாரண மாகக் கூறிவிடமுடியாது. ஆனாலும், இதில் எந்த வகை எலும்பு என்பதில் சிலர் ஏற்படுத்துகிற பிரச் சினை மருந்து உற்பத்தித் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.
பசுக்கொலை தடுப்புச் சட்டத்தை விரிவாக்கி எருது, எருமை ஆகிய மாடுகளையும் மகாராட் டிரம் மற்றும் அரியானா அண்மையில் குற்றமாக்கி சட்டங்களை நிறைவேற் றியுள்ளன.
எருது, எருமைகளைக் கொல்வதும் தற்போது தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் அய்ந்து ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அரியானாவில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறி விக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை எருமைமாடுகள்தான். இது வரையிலும் சட்டத்தின் படி தடை இல்லாமல் இருந்தது. இப்போது அதற்கும் தடை வந்து விட்டதால், தண்டனைக்கு பயந்து ஏராளமான உணவு விடுதிகள், உணவ கங்களில் மாட்டிறைச்சி உணவு வழங்குவதை நிறுத்திவிட்டனர்.
21 லட்சம் கால்நடைகள் பன்னாட்டு வேளாண் முறைமை நிறுவனத்தின் தகவலின்படி, இந்தியா உலகிலேயே கால்நடை களில் அதிக எண்ணிக்கை உள்ள நாடாக இருக்கிறது. 21 இலட்சம் கால்நடை எலும்புகள் தொழிற் சாலைகளில் பயன்படுத் தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக அளவிலான கால் நடைகளின் எண்ணிக்கை இருப்பதால் ஜெலட்டின் ஏற்றுமதியாளர்கள் முன்னணியில் உள்ளனர். குஜராத்தில் இயங்கிவரும் நீட்டா தொழிற்சாலை தான் ஜெலட்டின் உற் பத்தியில் முக்கிய மய்யமாக உள்ளது.
கால்முட்டி வலிக்கு அளிக்கப்படும் புரோட் டின் துணைப்பொருள் கொலோஜென் பெப் டைட், ஜெலட்டினிலி ருந்து உருவாக்கும் தொழில் தற்போது அபாயத்துக் குள்ளாகியுள்ளது.
ஜெலட்டின் உற்பத்தித் தொழிலில் ரூ.5,000 கோடி மதிப்பிலான ஜெலட் டினை வாங்குகிற இடத் தில் உள்ள முதன்மையான பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
மருந்து நிறுவனங்களில் ஒவ்வொரு 10 மாத்திரை கள் விற்பனையாகும்போ தும் ஒரு கேப்ஸ்யூல் விற்பனையாகிறது. ஆஸ்த் துமாவுக்கான மருந்துகளில், கேப்ஸ்யூல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் கூறும்போது, கேப்ஸ் யூல்கள் பயன்பாடு அலோ பதி மருத்துவத்துக்கு மட்டும் என்கிற வரை யறைக்குட்பட்டதல்ல. ஆயுர்வேத மருந்து தயா ரிப்பாளர்களும் கேப்ஸ்யூல் முறையைக் கையாளத் தொடங்கி விட்டார்கள்.
மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் சார்பில் அதன் மூத்த அலுவலர் ஒருவர் கூறும்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பின ராக உள்ளவர்களே எங் களைப்போன்ற  மருந்து தொழில் நிறுவனங்களுக்கு கால்நடை எலும்புகளை சேகரித்துக் கொடுத்து வருகிறார்கள். இந்தத் தடையானது அவர்கள் மத்தியில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, இனி நாங்கள் கேப்ஸ்யூல்களை இறக் குமதி செய்ய வேண்டி உள்ளது. அதேநேரத்தில் பலபேருக்கான பணிவாய்ப் பும் இதில் தொடர்புள்ளது என்பதை உணரவேண்டும் என்றார்.
மாட்டிறைச்சியிலிருந்து உற்பத்திப்பொருள்கள்
மருந்துகளில் ஏராள மான அளவில் மாட் டிறைச்சியிலிருந்து பெறப் படக்கூடிய பொருள்கள் (ஙிஷீஸ்வீஸீமீ றிக்ஷீஷீபீநீ) பயன் படுத்தப்படுகின்றன. இது குறித்து அரசுத்துறையில் உள்ளவர்கள் விழிப்பு ணர்வு ஏதும் இல்லாமல் உள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரோட்டாவைரஸ் போன்ற தடுப்பு மருந்துகள் எதிர்ப்பு சக்திக்காக பரிந் துரைக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சையின் போது இரத்தம் உறைந்து போவதைத் தடுப்பதற்கான துரோம்பின் (ஜிலீக்ஷீஷீனீதீவீஸீ) எனும் மருந்து மாட்டின் கருவிலிருந்து பெறப்படும் சீரத்திலிருந்தும் பசு மாட்டின் கருவிலிருந்தும் துணைப்பொருள்களாக பெறப்படுகின்றன.
இல்லினாய்ஸ் பகுதி யில் இயங்கிவரும் பன் னாட்டு செர்ரம் தொழில் கூட்டமைப்பு விலங்குகளி லிருந்து பெறப்படும் சீரம் விற்பனையை முறைப்படுத் திவருகிறது. அந்த அமைப் பின் உறுப்பினர்கள் மருந்து நிறுவனங்களுக்கு பெற்றுத்தருவதற்கும், விற்பனை செய்வதற்கும் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
மாட்டின் கருவிலிருந்து கிடைக்கும் இரத்தம் இந்தியாவிலிருந்து பெறப் படுகிறது. பன்னாட்டு செர்ரம் தொழில் கூட்ட மைப்புடன் இணைந்து  இந்தியாவிலிருந்து விநி யோகஸ்தர்கள் அதற்குரிய கால்நடை மருத்துவச் சான்றுகளுடன் அளிப் பார்கள் என்பதை அக்கூட் டமைப்பின் சார்பில் உறுதி செய்துள்ளனர்.
மறுசிந்தனை வேண்டும்
மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்கின்ற மாநில அரசுகள் வெளிநாடுகளி லிருந்து கால்நடைகளின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதையும் தண்ட னைக்கு உரிய குற்றமாக கொண்டுவருவதில், மருத் துவத்துறைக்காக மாட்டி றைச்சி தடைகுறித்து மறு சிந்தனை செய்ய வேண்டும்.
கடந்த பத்தாண்டு களில் மருந்து தொழிலில் கால்நடைகளில் மாற்றாக சிலவற்றைப் பயன்படுத் துவது குறித்து ஆய்வு நடைபெற்றுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் தையல் போட பயன் படும் நூலாக, மாட்டின் குடலுக்குப்பதிலாக மருந்து நிறுவனங்கள் செம்மறி ஆடுகளைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. என் றாலும் மாட்டிறைச்சியின் துணைப் பொருளையே பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்
பன்னாட்டளவில் கேப்ஸ்யூல்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இரண்டாமிடத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனமாக உள்ள ஏசிஜி நிறுவனத் தின் தலைவரான அஜீத்சிங் கூறும்போது, சில ஆண்டு களுக்கு முன்பாக தாவரங் களிலிருந்து (கடற்பாசி அல்லது மரக்கூழ்) பெறப் படும் கேப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தினோம். மருந்து நிறுவனங்கள் அதை ஒரு பொருட்டா கவே எடுத்துக்கொள்ள வில்லை. இதற்கெல்லாம் பற்றாக்குறை ஏற்படும் என்று நிறுவனங்கள் கருதவில்லை. அதேபோல், நுகர்வோரும் அதைப் பற்றிக் கவலை கொள்வ தில்லை என்று கூறினார்.
 எக்னாமிக் டைம்ஸ்
- See more at: http://www.thoothuonline.com/archives/71985#sthash.j6qgW40m.dpuf
மாட்டிறைச்சித் தடையால் மருந்துகளின் விலைகளும் உயருகின்றன! மாட்டிறைச்சித் தடையால் மருந்துகளின் விலைகளும் உயருகின்றன! Reviewed by நமதூர் செய்திகள் on 05:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.