வி.களத்தூரில் மாநாட்டு அலுவலகம் திறக்கப்பட்டது.

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 
மக்கள் சங்கமம் மாநாட்டு அலுவலகம் 04.04.2015 
மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மக்கள் சங்கமம் மாநாடு வி.களத்தூரில் மே மாதம் 17 ம் தேதி நடைபெறுகிறது. 
அதற்கு முன்னோட்டமாக பல்வேறு பணிகளில் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மாநாடு சம்மந்தமாக மக்களுடன் தொடர்பு கொள்ள மாநாட்டு அலுவலகம் வி.களத்தூரில் 04.04.2015 மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டது. ஜனாப். K.சவுகத் அலி அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகரத் தலைவர் S.நிசார் அலி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் K.காஜா சரீப் சிறப்புரை நிகழ்த்தினார். SDPI கட்சி மாவட்ட தலைவர் Dr. A.முஹம்மது ரபீக், SDPI கட்சி மாவட்ட செயலாளர் A.இதயதுல்லா அவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பெருந்திரளான வி.களத்தூர் மக்கள் கலந்து கொண்டனர்.










வி.களத்தூரில் மாநாட்டு அலுவலகம் திறக்கப்பட்டது. வி.களத்தூரில் மாநாட்டு அலுவலகம் திறக்கப்பட்டது. Reviewed by நமதூர் செய்திகள் on 20:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.