துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஜூன் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!


துபாய். ஜூன் 14.
துபாய்-தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று இரவு 9:00 மணியளவில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஜூன் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
 துபை மண்டல தலைவர் M.அப்துல்லா பாஷா தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.
 கடந்த மே மாதம் கூட்டத்தில் தீர்மானத்தின்படி லப்பைகுடிக்காட்டில் இருந்து வந்த மருத்தவ உதவி கடிதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்பப் பட்டதாக தவைவர் அப்துல்லா பாஷா தெரிவித்தார்.
 வி.களத்தூர் மக்களுக்கு கனிவான வேண்டுகோள் !
 புஷ்ரா நல அறக்கட்டளையின் மருத்துவ உதவி,திருமண உதவி,கல்வி உதவி, போன்ற கடிதங்களை துபைக்கு நீங்கள் நேரடியாக அனுப்ப வேண்டாம்.நமது வி.களத்தூர் கிளைத் தலைவர் M.அன்சர் அலி (M.A. ஹார்டுவேர்ஸ் வண்ணராம்பூண்டி) அவர்களிடம் தங்களின் மனுவை ஒப்படைக்கவும்.
புஷ்ரா நல அறக்கட்டளையின் முதலீட்டு திட்டம் மூலம் பெரம்பலூரில் வாங்கப்பட்ட புதிய வீடு அதற்க்கான உறுதி மொழி பத்திரம் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இக்கூட்டத்தில் வழங்க பட்டன.இந்த புதிய வீடு வாங்க பெரும் முயற்சி செய்து பல  முயற்ச்சி செய்து முடித்த பொது செயலாளர்கள் A.அப்துல் சாலம் மற்றும் A.ஷேக் தாவூத் அவர்களை பாராட்டி இக்கூட்டம் நன்றி தெரிவிக்கப் பட்டது.
 இந்த வருடமும் புஷ்ரா நமது அறக்கட்டளை வழக்கம் போல்  ரமலான் பெருநாள் அன்று வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிக்காடு பகுதியில் தரமான ஈத் கேக் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டன. இதற்கான உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டன.
மேலும் லப்பைகுடிகாட்டில் நமக்கு நாமே திட்டம், வியாபாரிகள் வட்டியில்லா கடன் திட்டம்,  ஆரம்பிக்கப்பட்டதை மேலும் விறிவுபடுத்துவதை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
 பின் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தேனீர் கொடுக்கப்பட்டன.  இனிதே துஅவுடன் கூட்டம் நிறைவு பெற்றன.

    
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 FAIZUR RAHMAN.


துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஜூன் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது! துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஜூன் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது! Reviewed by நமதூர் செய்திகள் on 21:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.