வி.களத்தூர் டிரைவர் ஹாஜியார் விபத்து குறித்து நாளிதழ் செய்திகள்!

வி.களத்தூர் டிரைவர் ஹாஜியார் விபத்து குறித்து நாளிதழ் செய்திகள்!

தினமணி செய்தி:
மதுரையில் இருந்து சென்னை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் புறவழிச்சாலையை கடக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது, பேருந்தில் இருந்த மற்றொரு ஓட்டுநரான பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த ஹாஜியார் (48) என்பவர் கீழே குதிக்க முயன்றார். இதில் பேருந்தின் அடியில் சிக்கிய அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
÷இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.



தினகரன் செய்தி :
திண்டிவனம், ஜூன் 3:
திண்டிவனம் அருகே தனித்தனி விபத்துகளில் பஸ், லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பலியானார்கள்.
மதுரையில் இருந்து 50 பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ், சென்னை சென்று கொண்டு இருந்தது. நேற்று திண்டிவனம் புற வழிச்சாலையில் வரும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சிறிது தூரத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் வி.கொளத்தூரைச் சேர்ந்த ஹாஜியார் (48) என்பவர் கீழே குதிக்க முயன்று உள்ளார். எதிர்பாராத விதமாக அவர், பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டிவனம் போலீசார் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிரேன் மூலம் பஸ்சை மீட்டனர். பலியான டிரைவர் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினத்தந்தி செய்தி :



வி.களத்தூர் டிரைவர் ஹாஜியார் விபத்து குறித்து நாளிதழ் செய்திகள்! வி.களத்தூர் டிரைவர் ஹாஜியார் விபத்து குறித்து நாளிதழ் செய்திகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.