வகுப்புவாத துவேஷத்தை தூண்ட இந்துதுவாவினர் முயற்சி!


புதுடெல்லி: நரேந்திரமோடியை அனைவரும் ஒப்புக்கொள்ளும் பிரதமராக காட்டுவதற்கு போலி ஃபேஸ்புக் பிரச்சாரங்களை இந்துத்துவா தீவிரவாத சக்திகள் நடத்தி வருகின்றனர்.சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை போஸ்ட் செய்வதும், அதற்கு போலியான லைக்குகளை அளிக்கும் வேலையை இந்துத்துவாவினர் செய்து வருகின்றனர்.இந்துத்துவாவினரின் கருத்துக்களை பொதுமக்களின் கருத்துக்களாக சித்தரிப்பதே நோக்கமாகும்.நடுநிலையான மக்களை இவர்களின் முயற்சி குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு ஊக்கமளிக்கும், இதர மதங்களுக்கு எதிராக விஷம் தோய்ந்த கருத்துக்களை தெரிவிக்கும் போஸ்டுகளுக்கு கண்ணை மூடி திறக்கும் முன்னரே நூறுக்கணக்கான லைக்குகள் கிடைக்கின்றன.யார் இவற்றையெல்லாம் லைக் அளித்து, ஷேர் செய்கின்றார்கள்? என்பதை பரிசோதித்தால் உண்மை வெளிவரும்.கேரளாவில் இருந்து போஸ்ட் செய்யப்படும் கருத்துக்களுக்கு மலையாளம் தெரியாத, கேரளாவைக் குறித்து எதுவும் அறிய வாய்ப்பில்லாத ரஷ்யா, அர்ஜெண்டினா, சிலி, ஜப்பான், சீனா, நெதர்லாந்து, உகாண்டா, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்துதான் இந்துத்துவாவினரின் விஷம கருத்துக்களுக்கு 95 சதவீத லைக்குகள் கிடைக்கிறது.இவையெல்லாம் போலி ஃபேஸ்புக் ப்ரொபைல்கள் என்பது தெளிவு.
வகுப்புவாத துவேஷத்தை தூண்ட இந்துதுவாவினர் முயற்சி! வகுப்புவாத துவேஷத்தை தூண்ட இந்துதுவாவினர் முயற்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 21:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.