சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வி. ராஜன்துரை.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2014- 2015-ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் (ஜ்ஜ்ஜ்.ம்ர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய்) மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலவரையறை புதியதிற்கு 30.9.2014 மற்றும் புதுப்பித்தலுக்கு 15.11.2014 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014- 2015-ம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு 2,279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.ம்ர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கையொப்பமிட்டு அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து, பயிலும் கல்வி நிலையங்களில் 10.10.2014-ம் தேதிக்குள் புதியதிற்கும், 20.11.2014-ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதால், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும்போது வங்கி கணக்கு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் செலுத்தும் முழுக்கல்வி கட்டணங்களும் (திரும்பப் பெறும் கட்டணங்களை தவிர்த்து) வழங்கப்படும். இதர கல்வி நிறுவனங்களில், விடுதியில் தங்கி பயில்பவருக்கு ரூ. 30 ஆயிரம், விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை அதிகபட்சமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை, கல்வி நிறுவனங்கள் அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும், விண்ணப்பப் படிவங்களில் கையொப்பமிட்டு, அத்துடன் அனைத்து சான்று ஆவணங்களையும் 20.10.2014-ம் தேதிக்குள் புதியதிற்கும், 25.11.2014-ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் சிறுபான்மையினர் நல ஆணையர், 807 அண்ணா சாலை (5-வது தளம்) சென்னை - 2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலக தொலைபேசியில் 044-28523544, 28520033 தொடர்பு கொள்ளலாம்.
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் Reviewed by நமதூர் செய்திகள் on 00:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.