அதிமுக அலுவலகம் முற்றுகை!

அதிமுக அலுவலகம் முற்றுகை!

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மாணவர்களைப் பாதிப்படைய செய்யும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது” எனவும், இதுகுறித்து தமிழக அரசிடம் ஏற்கெனவே விளக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு கொண்டுவந்த 85 சதவிகிதம் இடஒதுக்கீட்டுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு என தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாஜக-வுக்கு, தமிழக ஆளுங்கட்சியான அதிமுக-வின் மூன்று அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்தன.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வழங்க மத்திய அரசிடம், அதிமுக வலியுறுத்தக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வழக்கறிஞர் துரைசாமி தலைமையில் இன்று ஜூலை 16ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக அலுவலகம் முற்றுகை! அதிமுக அலுவலகம் முற்றுகை! Reviewed by நமதூர் செய்திகள் on 05:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.