முரசொலிக்கு வைகோ வாழ்த்து!

முரசொலிக்கு வைகோ வாழ்த்து!

திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் பவள விழாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி திமுக சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பவள விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு தலைவர்களுக்கும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை, மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அதேபோல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் நேற்று (ஜூலை 22) செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “முரசொலி பவள விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. விழா சிறப்பாக நடைபெற என்னுடைய வாழ்த்துகள். வாழ்த்து செய்தியும் அனுப்பியுள்ளேன். ஆனால், விழாவில் பங்கேற்பதில் சில சிரமங்கள் உள்ளதால், என்னால் விழாவில் பங்கேற்க இயலவில்லை” என்று தெரிவித்தார்.
முரசொலிக்கு வைகோ வாழ்த்து! முரசொலிக்கு வைகோ வாழ்த்து! Reviewed by நமதூர் செய்திகள் on 23:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.