உலக அரங்கில் இரங்கல்!

உலக அரங்கில் இரங்கல்!

கடந்த ஜூலை 13 ஆம் தேதி காலமான ஓவியர் வீர சந்தானத்தின் இறுதி நிகழ்வு இன்று ஜூலை 15 ஆம் தேதி மாலை சென்னை மயிலாப்பூரில் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் தமிழ் உணர்வாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
.தமிழகத்தில் பல தலைவர்களும் வீர சந்தானத்துக்கு இரங்கல் தெரிவித்த நிலையில்… இத்தாலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்துல ஈழத்தமிழர் மக்களவை வீர சந்தானத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியில்…
’’ தமிழீழ விடுதலையை உளமாற நேசித்து தனது மூச்சாக வாழ்ந்துவந்த ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.
சுதந்திர தமிழீழமெனும் உன்னத லட்சியத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தளராத நிலைகொண்டு பக்கபலமாக செயலாற்றி வருகின்றது. அவ்வாறான பெருமைமிகு அத்தியாயத்தில் என்றென்றும் மரியாதையுடன் நினைத்துப் பார்க்கும் உயர்ந்த மனிதராக வீரசந்தானம் ஐயா திகழ்வார் என்பது உறுதி.
நெஞ்சத்தில் இருக்கும் எண்ணங்களை தூரிகை கொண்டு உணர்வோடு படைப்புக்களாக்கி எழுச்சிமிகு தடம்பதித்த ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் வீரசந்தானம் ஐயாவின் ஆத்மா அமைதிபெறவும் வேண்டுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளது அனைத்துல ஈழத் தமிழர் மக்களவை.
உலக அரங்கில் இரங்கல்! உலக அரங்கில் இரங்கல்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:27:00 Rating: 5

No comments:

Powered by Blogger.