தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை: மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொலை!

தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை: மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொலை!
மொகாலி(23 செப் 2017): பஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
65 வயதான மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆவார். அவரும் மற்றும் அவரது 92 வயது தாயார் குர்சரண் கவுரும் மொகாலியில் உள்ள அவர்களது வீட்டில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் கே.ஜே.சிங் வீட்டில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரில் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ், திரிபுரா ’தீன் ராத்’ தொலைக்காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுணிக், படுகொலையை தொடர்ந்து கடந்த 18 நாட்களில் மூன்றாவது பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாஜக ஆட்சியில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை: மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொலை! தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை: மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொலை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.