மாணவியை வன்புணர்ந்த சாமியார் சிக்கினார்!

மாணவியை வன்புணர்ந்த சாமியார் சிக்கினார்!
ஆள்வார் (23 செப் 2017): சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் சாமியார் பலஹரி பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வர் நகரில் மதுசூதன் ஆஸ்ரமம் நடத்து வருபவர் 70வயதான சுவாமிகவுசலேந்திர பர்பனாச்சாரி பலஹரி மஹராஜ். இவர் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை வன்புணர்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் வெளியில் தெரிந்தால் கொலை செய்துவிடுவதாகவும் சாமியார் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சாமியார் கைது செய்யப்பட்டார்.
சாமியார் மீது ஐ.பி.சி. 376(வன்புணர்வு), 506(மிரட்டுதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மாணவியை வன்புணர்ந்த சாமியார் சிக்கினார்! மாணவியை வன்புணர்ந்த சாமியார் சிக்கினார்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.