அப்படின்னா சொந்த புத்தியே இல்லையா?: அமைச்சரை விளாசும் நெட்டிசன்கள்!

அப்படின்னா சொந்த புத்தியே இல்லையா?: அமைச்சரை விளாசும் நெட்டிசன்கள்!
சென்னை(24 செப் 2017): ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைதான் வெளியே சொன்னோம். என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ’ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபோது நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக அப்போது பொய் சொன்னோம்’ என்றார்.
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். யாரோ சொன்னதைத்தான் சொன்னோம் என்கிறீர்களே சொந்த புத்தி என்பதே இல்லையா? என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே மைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டிடிவி தினகரன், ’பயத்தால் அமைச்சர்கள் மாறி மாறிப் பேசுகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவிக்காகத்தான் இப்படிப் பேசுகிறார்' என்று குற்றம்சாட்டினார்.
அப்படின்னா சொந்த புத்தியே இல்லையா?: அமைச்சரை விளாசும் நெட்டிசன்கள்! அப்படின்னா சொந்த புத்தியே இல்லையா?: அமைச்சரை விளாசும் நெட்டிசன்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.