2016 சட்டமன்ற தேர்தல் - மாற்றம் நிகழுமா?


2016 சட்டமன்ற தேர்தல் பல கட்சிகளுக்கும் 

முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில்  திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியை பிடிக்க கூடிய சக்திகளாக திகழ்கிறது.
அதற்கு காரணம் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒருங்கிணைத்து மிகப்பெரிய வெற்றிபெறுகிறார்கள்.
அதனால் தான் ஆட்சி மாறிமாறி வருகின்றன.

1996 ல் திமுகவும், 2001 ல் அதிமுவும், 2006 ல் திமுகவும், 2011 ல் அதிமுகவும் பலமான கூட்டணி அமைத்து கூட்டணி பலத்தின் மூலமே இரு கட்சிகளும் வெற்றி பெறுகின்றன என்பதுதான் உண்மை.

2014 நாடாளமன்ற தேர்தலில் மட்டும் அதிமுக தனித்து நின்று பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு எதிர்கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதும் ஒரு காரணமாக இருக்கிறது.

இப்போதுள்ள அரசியல் சூழலில் அதிமுகவிற்கு சொத்து குவிப்பு வழக்கும், திமுகவிற்கு 2ஜி உள்ளிட்ட வழக்குகளும் உள்ளது. 
அதனால் மக்கள் மாற்று சக்தியை எதிர்பார்கிறார்கள்.

உதாரணமாக 2014 நாடாளமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிட்ட கூட்டணி 75 லட்சம் வாக்குகள் வாங்கியது கவனிகதக்கது.

2016 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழக பாஜக இந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்தாலும், தேசிய பாஜக தலைமை ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடதான் விரும்பும். 
அது திமுக வுடன் கூட்டணி வைக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. திமுக, பாமக, மதிமுக, பாஜக இன்னும் சில கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்கலாம்.

இந்த கூட்டணிக்கு எதிராக அதிமுக தனித்து நிற்காமல் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கும்.

இந்த சூழலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் வெளியேறும். அவர்கள் அதிமுக விடம் செல்ல வாய்ப்புண்டு.
அந்த கட்சியினர் சிலரும் முகநூளில் அடுத்த தேர்தலில் 
அதிமுக தான் வெற்றிபெறும் என்போதுபோல எழுதுகிறார்கள்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் அதிமுகவிடம் செல்லாமல் 
மாற்று அணி அமைக்க வேண்டும். 

அதில் தலித்கள் அமைப்புகளையும், இஸ்லாமிய அமைப்புகளையும், தமிழர் நலனுக்காக போராடுகிற அமைப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். 

ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள், SDPI, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த கூட்டணி ஏற்பட்டால் தமிழக அரசியலில் மிகப்பெரிய 
மாற்றத்தை கொண்டு வரலாம். 
நாம் ஆட்சிக்கு வராவிட்டாலும், நம்முடைய வாக்குபலத்தின் மூலம் மற்றகட்சிகளை திரும்பி பார்க்க வைக்க முடியும்.
அதன் மூலம் நம்முடைய கோரிக்கைகளை வெற்றிபெற வைக்க 
அதை வாய்ப்பாக பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு சமூகங்களுக்கும் ஒரே எதிரிதான்.
அவர்கள் இன்று வளர்ந்து வரும் சூழலில்  
இந்த கூட்டணி இன்றைய காலத்தின் தேவை.

இதுநாள் வரை இந்த முயற்சியை செய்யவில்லை.
வருகிற தேர்தலில்  முயற்சி செய்யலாம்.

- வி.களத்தூர் பாரூக்
2016 சட்டமன்ற தேர்தல் - மாற்றம் நிகழுமா? 2016 சட்டமன்ற தேர்தல் - மாற்றம் நிகழுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 02:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.