மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 கணக்கு மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேலாளர் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, நவ. 20-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் மட்டுமே எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வானது நவ. 28-ம் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்த பதவிக்கு பி.காம்., அல்லது எ.காம்., உடன் டேலி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 7,500 வழங்கப்படும்.
மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 20:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.