வி.களத்தூர் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மற்றும் பரிசளிப்பு விழா

வி.களத்தூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிரச்சாரத்தின் இறுதி பகுதியாக 
01.11.2014 அன்று மாலை 6.40 மணியளவில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தை S.நிசார் அலி தொகுத்து வழங்கினார்.
நகர செயலாளர் M.சவுகத் அலி தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர் G.அப்துல் ரஹீம் வரவேற்று பேசினார்.
செயற்குழு உறுப்பினர் சர்தார் பாஷா முன்னிலை வகித்தார்.
SDPI கட்சி தலைவர் M.முஹமது பாரூக் 
வாழ்த்துரை வழங்கினார்.
பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் M.அமீர் பாஷா 
சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம் பிரச்சரதின் நோக்கங்களை விரிவாக எடுத்து கூறி பேசினார்கள்.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற வாலிபால் போட்டி, கபாடி போட்டி, சிறுவர்கள் விளையாட்டு போட்டி யில் 
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் நடுவர்களாக செயல்பட்டவர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக சகோதரர் T.இஸ்மாயில் நன்றி கூறினார். 























வி.களத்தூர் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மற்றும் பரிசளிப்பு விழா வி.களத்தூர் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மற்றும் பரிசளிப்பு விழா Reviewed by நமதூர் செய்திகள் on 22:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.