ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க

ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

10637902_883871334979959_72802060_n
பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அரசியல் மற்றும் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், சிறப்பு முகாம்களில் இருக்கும் அனைவரையும் விதலை செய்யக் கோரியும் சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மே பதினேழு இயக்கம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, பாலசந்திரன் மாணவர் இயக்கம், அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமர்கயான் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
10637902_883871334979959_72802060_n

1. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோருகிறோம்
2. மத பேதம் பாராமல் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுகிறோம்.
3. இசுலாமிய சிறைவாசிகள் 10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் போது விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோருகிறோம்.
4. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன்..? தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை கோருகிறோம்.
5. மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.
10815830_848933208462228_157454663_n

6. அனைத்து சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
7. இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக இருக்கும் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்ய தமிழக அரசை வலியுருத்துகிறோம்.
8. கோவை சிறையில் இனம்புரியாத சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய கோருகிறோம்.
9. தமிழக சிறைகளில் ஆயுள்சிறையாளிகளில் பெரும்பான்மையானவர்கள் படிப்பறிவு அற்ற பாமர ஏழைகள், உழைப்பாளிகள், இசுலாமியர்கள் தலித்துகள், தொழிலாளிகள். இவர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் விதமாக 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து ஆயுள்சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோருகிறோம்.
10. சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட கொடுமையான சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்து அவர்களின் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழ சிறப்புமுகாம்களில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என கோருகிறோம்.
ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க Reviewed by நமதூர் செய்திகள் on 21:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.