மக்கள் விரோத மற்றும் வகுப்புவாத சக்திகளை தோற்கடிப்போம்! தில்லி மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

தில்லி :  தில்லி சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத மற்றும் வகுப்புவாத சக்திகளை வெல்லும் விதமாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என தில்லி வாக்காளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கார்ப்பரேட்களின் தீவிர நிதியுதவி மூலம் ஆட்சியை பிடித்த மத்திய அரசு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நிறைவேற்ற தவறிவிட்டது. பாராளுமன்ற தேர்தலின் போது மிகவும் பிரபல்யமாக பிரச்சாரம் செய்யப்பட்ட வளர்ச்சி மற்றும் நல்லாட்சி வெறும் விளம்பர யுக்திகளே என்பதும் நிரூபனமாகியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டும் NDA அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது; அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யவே இந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொள்கிறது. மக்களவையில் விவாதிக்காமல் அவசர சட்டங்கள் வாயிலாக காரியத்தை சாதிக்க நினைக்கும் அரசின் நடவடிக்கைகள் இதன் ஒரு பகுதியே! அரசின் புதிய கொள்கைகள் அனைத்தும் நாட்டின் பணக்காரர்களையே மென்மேலும் வளர்க்க உதவும் என்பது தெளிவாகி உள்ளது.
 இனவாத சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிரான தனது விஷம செயல்பாடுகளை செய்து வருகின்றன. தேசிய தலைநகரிலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சார்ந்தவர்கள் இவர்களின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் தில்லியில் கடந்த 2 மாதத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 5 தாக்குதல்கள் நடந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் சுற்றும் பயணங்களுக்கும் உலக தலைவர்களை வரவேற்கவும் அதிக நேரம் செலவளித்த பிரதமர், தனக்கு மிகவும் நெருக்கமான சங்கபரிவார்களின் பாசிச செயல்பாடுகளை தடுக்கவோ கண்டிக்கவோ (கூட) நேரமில்லாமல் போயிற்று! தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு முக்கியமான பிரச்சனை ஆகிவிட்டது. தில்லியில் நடந்த மிருகத்தனமான கற்பழிப்பு சம்பவத்திற்கு பின் பொதுமக்களுக்கு மத்தியில் எழுந்த உணர்வலைகளை பயன்படுத்திய பிஜேபி, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது.
 இந்த விசித்திரமான சூழலில் பல்வேறு மாநிலங்களில் கிடைத்த வெற்றியின் களிப்பில் கிடக்கும் BJPக்கு வலுவான செய்தியை உணர்த்த கடமைப்பட்டுள்ளோம். மக்கள் விரோத மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளின் போது அரசு சாதிக்கும் மௌனம் ஆகியவை நாட்டின் மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.
அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் பாசிச சக்திகளின் பிரிவினைவாத கொள்கைகளையும் நிராகரிப்பதில் தில்லி மக்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த பின்னணியில் வகுப்புவாத மக்கள் விரோத கூறுகளை தோற்கடிக்க தில்லி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமைகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேண்டுகோள் விடுக்கிறது.
- See more at: http://www.thoothuonline.com/archives/71319#sthash.K7ECwBzq.dpuf
மக்கள் விரோத மற்றும் வகுப்புவாத சக்திகளை தோற்கடிப்போம்! தில்லி மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்! மக்கள் விரோத மற்றும் வகுப்புவாத சக்திகளை தோற்கடிப்போம்! தில்லி மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்! Reviewed by நமதூர் செய்திகள் on 06:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.