மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை!

மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை!
மும்பை (24 ஜூலை 2018): மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் அரசுப் பணி மற்றும் கல்வி துறையில் எங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என மராத்தா சமூகத்தினர் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் செய்து போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினார்கள். வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது. இந்ந போராட்டத்தின்போது 28 வயது உடைய காகாசாகேப் ஷிண்டே என்ற வாலிபர் கோதாவரி ஆற்றில் குதித்தார். உடனே அவர் மீடக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் வாழும் முஸ்லிம் சமூகத்தினர் தங்களுக்கும் ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளன. ஏற்கனவே இட ஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளதால், பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை! மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 06:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.