தொழுகையினிடையே கலவரம்: ஹிந்துத்துவா சதி!

வெள்ளிக்கிழமை தொழுகையினிடையே கலவரம்: ஹிந்துத்துவா சதி!
பீகார்(16 ஏப். 2016): தொழுகை நேரத்தில் மசூதி அருகே ஹிந்துத்துவா அமைப்பினர் செய்த கலகம் பெரும் கலவரத்தில் முடிந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் கோபால்கஞ் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மிர்கஞ் ஏரியாவில் அமைந்துள்ளது மதீனா பள்ளிவாசல். நேற்று(வெள்ளிக்கிழமை) முஸ்லிம்களின் சிறப்பு தொழுகை நேரமான மதிய நேரத்தில் பள்ளிவாசலில் தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஹிந்துத்துவா அமைப்பினர் ராமர் தேர் ஒன்றை இழுத்து வந்தனர். அதனுடன் ஸ்பீக்கரில் அதிக ஒலியுடன் பாடல்கள் இசைத்து வந்துள்ளனர்.

மசூதி முன்னிலையில் வரும்போது மேலும் அதிக ஒலியுடன் தொழுகைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஹிந்துத்துவாவினர் செயல்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிலர் ஸ்பீக்கர் ஒலியினைத் தொழுகைக்கு இடையூறு இல்லாமல் குறைப்பதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதற்கு ஹிந்துத்துவாயினர் எதிர்ப்பு தெரிவித்து ஒலியை மேலும் அதிகப்படுத்தியதோடு மசூதியின் முன்னிலையில் தேரை நிறுத்தி வைத்து ஆடிப்பாடினர். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு அதிகமாகியது. இந்நிலையில் கும்பலில் இருந்த சிலர் மசூதிமீது கற்களை எறிந்தனர். தொடர்ந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் கடைகளுக்குத் தீ வைத்து கொளுத்தினர்.
இதையடுத்து பக்கத்து கிராமங்களுக்கும் கலவரம் பரவியது. கலவரக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் கற்களை எறிந்து தீ வைத்து எரித்தனர். காவல்துறை கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசி மற்றும் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுகள் கொண்டு வந்துள்ளனர்.
இக்கலவரத்தில் சம்பவத்தை முழுமையாக படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்த பொதுமக்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அபூஷேக் முஹம்மத்
தொழுகையினிடையே கலவரம்: ஹிந்துத்துவா சதி! தொழுகையினிடையே கலவரம்: ஹிந்துத்துவா சதி! Reviewed by நமதூர் செய்திகள் on 00:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.