செக்ஸ் சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு!

செக்ஸ் சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு!
சண்டிகார்(28 ஆகஸ்ட் 2017): செக்ஸ் சாமியார் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி அரியானா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில், பஞ்சகுலா நகரத்தில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவரான கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. 50 வயதுடைய கும்ரீத் தன்னுடையப் பக்தர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது.
இந்நிலையில் ராம் ரஹீம் குற்றவளி என சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது. மேலும் தண்டனை குறித்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஹரியானா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெஹ்தீப் சிங் தீர்ப்பு வழங்கினார். 15 ஆண்டு விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் மாடர்ன் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஹரியானா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெஹ்தீப் சிங் தீர்ப்பு வழங்கினார். 15 ஆண்டு விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சாமியாரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தால் பதட்டம் ஏற்படும் என்பதால் நீதிபதி , ரோதக்கில் உள்ள சிறைக்கு சென்று தீர்ப்பை அறிவித்தார்.
செக்ஸ் சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு! செக்ஸ் சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு! Reviewed by நமதூர் செய்திகள் on 04:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.