பயமுறுத்தாதே: எச்சரிக்கும் ராகுல்!

பயமுறுத்தாதே: எச்சரிக்கும் ராகுல்!

கற்களை வீசி எங்களைத் தடுக்க முடியாது என கார் தாக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார்மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி சென்றனர். தாக்குதலில் இருந்து ராகுல் காந்தி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
குஜராத் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் வட குஜராத்தின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுச் சென்றார். மேலும், குஜராத் மாநிலத்துக்கு 500 கோடி ரூபாய் நிதியும் வழங்கியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், குஜராத் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஆகஸ்ட் 4) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தனிரா பகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பனஸ்கந்தா பகுதிக்கு ராகுல் காந்தி வந்தபோது, அவரின் கார்மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாறாக கண்ணாடிகள் நொறுங்கி, கார் பலத்த சேதமடைந்தது. ராகுலின் பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “நரேந்திர மோடி ஜி... கோஷம், கறுப்புக் கொடிகள் மற்றும் கற்களால் எங்களை பயமுறுத்த முடியாது. அனைத்து வகையிலும் மக்களுக்காக பணியாற்றுவோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பயமுறுத்தாதே: எச்சரிக்கும் ராகுல்! பயமுறுத்தாதே: எச்சரிக்கும் ராகுல்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.