பசுக்களை வேனில் ஏற்றிச் சென்ற இருவர் அடித்துக் கொலை!

பசுக்களை வேனில் ஏற்றிச் சென்ற இருவர் அடித்துக் கொலை!
கொல்கத்தா(28 ஆகஸ்ட் 2017): மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பசுக்களை வேனில் ஏற்றிச் சென்ற இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி கிராமத்தில் கடந்த 27 ஆம் தேதி இரவு இரண்டு பசுக்களை ஏற்றிய வேன் அந்த கிராமத்தை சுற்றி வந்திருக்கிறது. இதையடுத்து அந்த வேனை கிராமத்தினர் விரட்டி பிடித்து, வேனிலிருந்த இருவரை அடித்துத் துவைத்திருக்கின்றனர். இதில் இருவரும் இறந்துவிட்டனர். நள்ளிரவு நேரத்தில் கிராமத்தை அந்த வேன் சுற்றி வந்ததால்தான் கிராமத்தினர் சந்தேகப்பட்டு விரட்டிப் பிடித்திருக்கின்றனர்.
இறந்த இருவரில் ஒருவர் அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹபிஸுல் ஷேக், இன்னொருவர் கூச் பிகார் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ஹுசேன் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
பசுக்களை வேனில் ஏற்றிச் சென்ற இருவர் அடித்துக் கொலை! பசுக்களை வேனில் ஏற்றிச் சென்ற இருவர் அடித்துக் கொலை! Reviewed by நமதூர் செய்திகள் on 04:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.