திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பாஜக முயற்சி!

திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பாஜக முயற்சி!

தமிழகத்தில் அதிமுக-வைப் பலவீனப்படுத்தவும், திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவும் பாஜக முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விலக்கிக்கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கின்றனர். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று (ஆகஸ்ட் 27) வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னணி பொறுப்பாளர்களை பாஜக-வில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக-வைப் பலவீனப்படுத்தவும், திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதும்தான் பாஜக-வின் தற்போதைய செயல் திட்டமாக உள்ளது. தமிழகத்தில் மதவாத சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுக்க ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் சட்டச்சிக்கல் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய திருமாவளவன், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பாஜக முயற்சி! திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பாஜக முயற்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.