ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - பரவலாகும் மாணவர்களின் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - பரவலாகும் மாணவர்களின் போராட்டம் 

மீண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும், இக்கோரிக்கையை முன்வைத்து போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் கொண்டுவரக் கோரி மாணவர் போராட்டம் நடைபெற்றது.
நேற்று தொடங்கிய கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்றைய தினம் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டமாக தொடர்ந்தது.
இதேபோல், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை கண்டித்து போராடிய மாணவர்களை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இக்கோரிக்கையை முன்வைத்து பரவலாக மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - பரவலாகும் மாணவர்களின் போராட்டம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - பரவலாகும் மாணவர்களின் போராட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 03:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.