தோழர் ஃபிடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி!


கியூப புரட்சியாளரும் உலகில் முக்கியமான தலைவர்களுள் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கியூப தலைநகர் ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, கியூபா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் தலைநகரில் பிரமாண்ட பேரணியையும் நடத்தினார்கள். கியூபாவின் தேசியகீதத்துடன் தொடங்கிய இந்தப் பேரணியில், ஃபிடல் காஸ்ட்ரோவின் படங்களை கைகளில் ஏந்தியபடி மக்கள் அமைதியாக ஊர்வலம் சென்றனர்.
கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், வெனிசுலா அதிபர் நிக்கோஸ் மதுரோ, பொலிவியா அதிபர் ஈவோ மொராலஸ், தென் ஆப்பிரிக்க அதிபர் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டபோதிலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தங்களின் அதிபர்களை அனுப்பாமல் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் கியூபாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஹவானாவில் ஃபிடலின் புரட்சிகர வாழ்க்கை, புரட்சியாளர்களின் தியாகங்கள், கியூபா கட்டி எழுப்பப்பட்ட வரலாறு என பல காட்சிகள் மக்களுக்கு திரையிடப்பட்டிருக்கின்றன.
தோழர் ஃபிடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி! தோழர் ஃபிடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி! Reviewed by நமதூர் செய்திகள் on 06:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.