பாஜக-வினருக்கு சவால் விடும் அய்யாக்கண்ணு!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்காக திருச்சியில் பல போராட்டங்களை நடத்தி தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றவர். ஆனால், தமிழக அரசோ, மத்திய அரசோ அவருடைய கோரிக்கைகளைக் காதுகொடுத்து கேட்கவே இல்லை. மனம் தளராத அய்யாக்கண்ணு, விவசாயிகளின் அவலக்குரலுக்கு ஆட்சியாளர்கள் செவி சாய்த்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் தலைநகர் டெல்லி சென்று இன்றுடன் 23 நாள்களாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருகிறார்.
‘விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைக்கிறது. இதற்குக் காரணம் விவசாயிகளின் போராட்ட வழிமுறையும் உறுதியும்தான் காரணம். விவசாயிகளின் இந்தப் போராட்டம் மத்தியில் ஆளும் பாஜக-வுக்கு பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. தமிழக விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை பாஜக எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் நிற்கிறது. இந்நிலையில் அய்யாக்கண்ணுவின் நற்பெயரைக் கெடுக்க தமிழக பாஜக-வினர் களம் இறங்கினர்.
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக-வின் தேசியத் தலைவர் எச்.ராஜா ஒரு செல்போன் உரையாடலில், ‘அய்யாக்கண்ணுவுக்கு 100 ஏக்கர் நிலமும், ஆடி காரும் இருக்கிறது’ என்று கூறியதோடு அவர்மீது அவதூறுகளையும் பேசினார்.
எச்.ராஜாவின் அவதூறு பேச்சு குறித்து அறிந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இந்தப் போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக-வினர் என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். என்னைப்பற்றி அவதூறு பேசும் பாஜக-வினர், எனக்கு 100 ஏக்கர் நிலமும் ஆடி காரும் இருக்கிறது என்று நிரூபித்தால், நான் தூக்கில் தொங்கத் தயாராக இருக்கிறேன். அதை நிரூபிக்காவிட்டால் பாஜக-வினர் தூக்கில் தொங்கத் தயாரா?” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
பாஜக-வினருக்கு சவால் விடும் அய்யாக்கண்ணு! பாஜக-வினருக்கு சவால் விடும் அய்யாக்கண்ணு! Reviewed by நமதூர் செய்திகள் on 04:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.