முழு அடைப்புக்கு ஆதரவு : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

முழு அடைப்புக்கு ஆதரவு : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, வரும் 25ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அன்றைய தினம் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக நீண்டுவரும் இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்வண்ணம் ஏப்ரல் 16ஆம் தேதி திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பங்கேற்றன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதற்குமுன்னர், வரும் 22ஆம் தேதி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக இந்த முழு அடைப்புக்கான காரணப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் முழு அடைப்பன்று பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் தமிழகத்தில் கடையடைப்பு. இந்த முழு அடைப்புக்கு தொழிற்சங்கங்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதையேற்று விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது குறித்து இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் கூடி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 25ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களும் ஈடுபடுவதால் அன்று பஸ் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது' என்று தெரிவித்தார்.
முழு அடைப்புக்கு ஆதரவு : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! முழு அடைப்புக்கு ஆதரவு : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 22:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.