காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி, வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலின்போது ஏகமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

தேர்தல் ஆணைய விதியின்படி, அனைத்துக் கட்சிகளும் உள்கட்சி தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க வேண்டும். அதன்படி காங்கிரஸ் கட்சி, தலைவர் தேர்வு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 3 முறை கால அவகாசம் கேட்டதன்பேரில் வருகிற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை அந்தக் கட்சியின் தேர்தல் குழு அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 16 அல்லது அக்டோபர் 15ஆம் தேதி ஆகிய இந்த இரண்டு தேதிகளில் ஒன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெறும். இதில், துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் விரைவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்யப்படுவது பற்றி முடிவு செய்யப்படும்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான ஏ.கே.அந்தோணி இதுகுறித்து, ஏப்ரல் 18ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க இதுவே சரியான நேரம். ஆனால் இதுகுறித்து கட்சித் தலைவரான சோனியா காந்திதான் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி! காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.