ராஜஸ்தானில் இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொலை! – பசு காப்பாளன் போர்வையில் பலி கொடுத்த பாசிசவாதிகள்

ராஜஸ்தானின் ஆல்வார் நகர் அருகே கடந்த 1-ம் தேதியன்று முறையான ரசிதுகளுடன் 50 வயதான பெஹ்லு கான் என்ற முஸ்லிம் முதியவரும் அவருடைய உதவியாளர்களுடன் பசுக்களை அல்வர் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ’விஷ்வ இந்து பரிஷத்’ மற்றும் ’பஜ்ரங் தள் அமைப்பை’ சேர்ந்தவர்கள் வண்டியை வழி மறித்து வண்டியில் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு இரும்பு கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர், தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  55 வயதான பெலுகான் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.
இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது,
கடந்த சனிக்கிழமை கான் மற்றும் அவரின் சகாக்கள் அல்வர் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் வாகனங்களில் பசுக்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஹரியானாவைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். சுமார் 15 பேர் கொண்ட கும்பல் அவர்களைச் சரமாரியாகத் தாக்கியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 50 வயதான பெஹ்லு கான் என்ற முஸ்லிம் முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். மேலும், வீடியோ காட்சிகளின் உதவியுடன் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தார்.
இத்தாக்குதலை எதிர்த்து அம் மாவட்ட மக்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்..
ராஜஸ்தானில் இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொலை! – பசு காப்பாளன் போர்வையில் பலி கொடுத்த பாசிசவாதிகள் ராஜஸ்தானில் இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொலை! – பசு காப்பாளன் போர்வையில் பலி கொடுத்த பாசிசவாதிகள் Reviewed by நமதூர் செய்திகள் on 04:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.