சமஸ்கிருதம் கட்டாயம்: கிரண்பேடி உத்தரவு


புதுச்சேரியில் அடுத்த கல்வியாண்டில் இருந்து சமஸ்கிருத மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவு. அந்த உத்தரவை எதிர்த்து அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்து வருகிறார். இப்பதவிக்கு ஆளும் பாஜக அரசு இவரை நியமித்தது. இந்நிலையில் புதுச்சேரியில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருத மொழியைப் பாடமாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுக்கு இந்துத்துவ அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இந்த உத்தரவை அறிந்ததும் அனைத்துத் தரப்பு மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கட்சி பாகுபாடு இன்றி அனைத்துக் கட்சியினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
சமஸ்கிருதம் கட்டாயம்: கிரண்பேடி உத்தரவு சமஸ்கிருதம் கட்டாயம்: கிரண்பேடி உத்தரவு Reviewed by நமதூர் செய்திகள் on 22:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.